வெற்றி பெற வழி இறைவனை நினைத்து முன்னேறு: அன்னையின் அருளுரைகள்
வெற்றி பெற வழி இறைவனை நினைத்து முன்னேறு.இடைவிடாது இறைவனை இயன்ற வரை நினை.இறுதியில் ஒளி தெரியும். அந்த வேகமான முன்னேற்றத்தின் முடிவில் வெற்றி தெரியும்.
உன் எண்ணத்தை முழுமையாக இறைவனை குறித்த சிந்தனையில் செலவிடு . வெற்றி உன்னை வந்தடைவது நிச்சயம்.
இறைவனை நினைப்பது நல்லது.இறை உணர்வுடன் வாழ்வது உத்தமம். அதுவே முழுமையான வெற்றி.
உண்மையை நேசியுங்கள் அதன் ஒளியை நம் உடலில் ஊடுருவச் செய்யுங்கள். அதுவே வெற்றி பெற வழிவகுக்கும்.
உன் கடமையை அமைதியாக நல்லபடியாக நேர்மையாக முழு ஈடுபாட்டுடன் செய். அதை இறைவனிடம் சமர்ப்பி.அதன் முடிவு அபரிதமான வெற்றியை கொண்டு வரும்.
இறைவனை அவனின் சக்தியை குறித்து முழு மனதுடன் பிராத்திப்போம்.அந்த பிராத்தனை நம் தவறுகளை நேர்மையாக்கி, அறியாமையை அறிவுள்ளதாக்கி அனைத்திலும் அபரிமிதமான வெற்றியை பெறும் மனோசக்தியை உண்டாக்கும்.
உன் செயல் ,வேலை , லட்சியம், உணர்வுகள் அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பணம் செய்.நீ இறைவனுக்காகவே வாழ்வதாய் உணர்ந்து செயல்படு. உன்னுடைய இறையுணர்வை பலப்படுத்து.
உடனடியாக உன் இதயத்தில் இறைவனின் அருள், வேகம், ஆசிர்வாதம் கிடைப்பதை உணர்வாய்.வேதனைப்படுபவர்கள் வெற்றியை தேடி அலைபவர்கள், இந்த முறையில் இறைவனிடம் சரணடைந்தால் உறுதியாக பெறும் வெற்றி பெறுவர்.
துன்பங்கள் இன்பமாகவும்,தோல்விகள் வெற்றியாகவும்,பாவங்கள் பாராட்டுதலாகவும் மாறும். மேற்கண்ட வெற்றியை பெறும் பலம் உன்னிடம் இருக்கிறது. அது இறைவனை குறித்த பிராத்தனையால் ,நினைவால், முயற்சியால், எழுச்சியால் நிச்சயம் கிடைக்கும்.
நீ முழுமையான நம்பிக்கையை இறைவனிடம் செலுத்த வேண்டும். அந்த நம்பிக்கையும் சரணாகதியுமே உன்னை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். இதில் கொஞ்சம் கூட உன் உணர்வில் தளர்வோ, அவநம்பிக்கையோ கொள்ளாதே அந்த சக்தி நீ அறியாமலே உன்னிடம் புகுந்து உன்னை வெற்றி பெறச் செய்யும். இது உறுதி.











