கிழட்டு தன்மை நீங்க கீழாநெல்லியை சாப்பிடுங்க
கல்லீரலின் இயக்கம் சீராக நடைபெற்றால் இதன் விளைவாக உடலில் அழகும் ஆரோக்கியமும் நீண்ட இளமையும் எப்போதும் இயல்பாக இருக்கும்
கல்லீரலின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதாவது கல்லீரல் பாதிப்பு அடைந்து விட்டால் நமது உடலில் ஆரோக்கியம் பாதிக்கப்படும் இளமையிலேயே முதுமை தோற்றம் வந்துவிடும்
எனவே கல்லீரலை பலம்பெற செய்தால் போதும் உடலில் தோன்றும் அனைத்து விதமான நோய்களின் பாதிப்புகளும் வெகு எளிதாக விலகிவிடும்
கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க ஒரு எளிய வைத்தியம்
பச்சையான கீழாநெல்லி இலையை ஒரு கைப்பிடி அளவு பறித்து இதை மைபோல அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு பசு மோர் அல்லது பசும்பாலில் இதை கலக்கி காலை
வேளையில் வெறும் வயிற்றில் இதை பருகி வர இதன் விளைவாக கல்லீரல் மிகுந்த பலத்தை பெறும் மற்ற உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்க இது மிகவும் துணை புரியும் உடலில் எப்போதும் இளமை நீடிக்கும் இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நமது உடலில் மிக மிக முக்கிய உறுப்புகளான கல்லீரல் இரைப்பை சிறுநீரகம் பித்தப்பை கணையம் மண்ணீரல் கருப்பை போன்ற ராஜ உறுப்புகள் அனைத்தும் பழுது ஏற்படாமல் நல்லமுறையில் பாதுகாக்கப்படும்
சிறுநீரகம் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இயங்க கீழாநெல்லி பெரிதும் உதவும் எந்த முறையிலேனும் கீழாநெல்லியை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் சிறுநீரகம் பலம் பெறும்
இதன் மூலம் மண்ணீரல் பழுதடையாமல் பாதுகாக்கப்படும் நமது உடலில் மண்ணீரல் பழுதடையாமல் இருந்தால் சர்க்கரை நோய் பாதிப்புகள் உடலில் தோன்றாது
சர்க்கரை நோயின் பாதிப்பால் இன்சுலின் சுரப்பு குறைந்திருந்தாலும் கீழா நெல்லியை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும் கணையமும் நன்கு செயல்பட துவங்கும்
சர்க்கரை நோயின் பாதிப்பில் இருப்பவர்கள் கீழாநெல்லியுடன் சம அளவாக வெள்ளை கரிசலாங்கண்ணியை சேர்த்து இரண்டையும் பொடியாக செய்து கொண்டு இதை தினந்தோறும்
காலை மாலை இருவேளையும் இதில் மூன்று கிராம் எடுத்து இதை வெந்நீரில் கலந்து இதை தொடர்ந்துசாப்பிட்டு வர சர்க்கரை நோயின் பாதிப்புகள் அனைத்தும் முழுமையாக விலகும் மேலும் உடலில் மற்ற நோய்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் இது நமது உடலை பாதுகாக்கும்
ரத்த சோகை இருப்பவர்கள் இந்த மருத்துவ முறையை கடைபிடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும் இரத்தத்தின் உற்பத்தி அதிகரிக்கும்
கீழாநெல்லி இலையை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து மை போல அரைத்து பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல குளிர்ச்சி உண்டாகும் உடல் உஷ்ணத்தால் இளைத்த உடலில் கொஞ்சம் சதை பிடிக்கும் முகத்தில் அழகும் பொலிவும் ஏற்படும்











