வேறு யாரும் செய்ய முடியாததை நீங்கள் செய்யும் பொழுது,
உங்களுடைய அகங்காரமும்,
உங்களைச் சேர்ந்த மக்களுடைய அகங்காரமும் ஒருங்கே திருப்தி அடைகின்றன.
ஒரு நிகழ்ச்சி:
ஒருவன் ராமகிருஷ்ணரிடம் வந்தான்… அவன் தற்பெருமையுடையவனாகவும், அகங்காரமிக்கவனாகவும் இருந்தாள்.
அவன், “உங்களுக்குத் தெரியுமா? என்னால் இந்த ஆற்றின் மேல் நடக்க முடியும்.” என்றான்….
அவர்கள் தட்சிணேஸ்வரத்தில்,
கங்கை ஆற்றின் கரையில் உட்கார்ந்திருந்தார்கள்…..
அவன் சொன்னதைக் கேட்டு
ராமகிருஷ்ணர் சிரித்தார்…..
அவர் மிகவும் எளிமையானவர்..
மற்றும் வெகுளியானவர்…
ராமகிருஷ்ணர், “அப்படியா! இந்த ஆற்றின் மேல் நடக்க முடியுமா?”
என்று கேட்டார்….
அவன் பெருமையாக, “ஆமாம்”…
“இந்த தந்திரவித்தையைக் கற்றுக்கொள்ள, உனக்கு எத்தனை வருடம் ஆயிற்று?”
“பதினெட்டு வருடம்”..
ராமகிருஷ்ணர் சிரித்தவாறு,
“நீ ஒரு முட்டாள்…பதினெட்டு வருடங்களை வீணடித்துவிட்டாய்…
நான் இந்த ஆற்றின் அடுத்த கரைக்குச் செல்ல வேண்டுமானால்,
இரண்டு பைசா போதும்….
ஆக இரண்டு பைசாவுக்கு ஏற்ற வேலையை, நீ பதினெட்டு வருடமாக முயன்றிருக்கிறாய்…
நான் உன்னைப் போன்ற முட்டாளை இதுவரை பார்த்ததில்லை…
நீ உன்னுடைய வாழ்க்கையை
வீணடித்து விட்டாய்…
என்னால் ஒரு சாதாரண படகில் அக்கரைக்குச் செல்ல முடியும்….
வேறு எதுவும் தேவையில்லை..
ஆனால் நீயோ….?”
இதைப் போன்ற தந்திர வித்தைகள் தான் மக்களைக் கவர்கின்றன….
உங்களிடம் ஏதாவது அபூர்வ நிகழ்ச்சி நடந்தால், உங்கள் மனம் அதைப் பெரிதும் விரும்புகிறது….
ஆனால், அற்புதங்கள் தொடர்ந்து
நடந்துக் கொண்டேதான் இருக்கின்றன…
ஆனால் அதை நீங்கள் தான் பார்க்கவில்லை….
உதாரணமாக,
நீங்கள் மூச்சை விடுகிறீர்கள்….
நீங்கள் உயிர் வாழ்கிறீர்கள்…
நீங்கள் பிறரிடம் அன்பு செலுத்துகிறீர்கள்….
அந்த அழகிய சூரியகதிர்களைப் பார்க்கிறீர்கள்….
நீலவர்ண ஆகாயத்தை ரசிக்கிறீர்கள்…
இந்த உலகமே உங்களை ஆசீர்வதிக்கிறது…..
ஆகவே, ஒவ்வொரு கணமும் அற்புதங்கள் உங்களைச் சுற்றியும், உங்களுக்குள்ளேயும் நிகழ்ந்தவாறு இருக்கின்றன….
அதை அனுபவித்து வாழுங்கள்…..











